தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் பறவை காய்ச்சல்: 2 லட்சம் கோழிகள் அழிப்பு

Advertisement

திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், பண்ணையில் 2 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா மண்டலம், குந்த்ரப்பள்ளி கிராமத்தில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பதாக தகவல் பரவியது. மேலும் ஒரு கோழிப் பண்ணையில் பிராய்லர் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நேற்று அங்கு வந்துள்ள கால்நடை மருத்துவர்கள் கோழிகளை பரிசோதனை செய்தனர். அதில் சுமார் 2 லட்சம் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை கொல்ல முடிவு செய்தனர். அதன்படி 2 லட்சம் கோழிகளை பாதுகாப்பாக அழித்தனர். மேலும் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா மண்டலம், குந்த்ரப்பள்ளி கிராமத்தில் அதிகாரிகள் சுற்றியுள்ள பகுதியை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சிறப்பு முகாம்கள் அமைத்து யாருக்காவது தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளதா என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Related News