தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தருவது குற்றமாக அமையாது: இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை

Advertisement

மதுரை: டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தருவது குற்றமாக அமையாது என்று கூறி ஐகோர்ட் கிளை, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் மீது காதலிக்கு முத்தம் தந்ததாக கூறி, போலீஸ் தரப்பில் வழக்கு பதிந்துள்ளதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் வயது 20. இவரும், 19 வயதான இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். அப்போது தனது காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததாகவும், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில், காதலிக்கும் இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் எந்த விதத்திலும், இந்திய தண்டனை சட்டம் 354-ஏ(1)(ஐ) பிரிவின் கீழ் குற்றமாக அமையாது. எனவே, மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, மனுதாரர் மீது நடவடிக்கைகளை தொடர்வது, சட்ட துஷ்பிரயோகமாக அமையும். இந்த வழக்கில் ஏற்கனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், போலீசார் விசாரணையை முடித்து திருவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். எனவே, மனுதாரர் மீதான இந்த வழக்கையும், வழக்கு தொடர்பான தொடர் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News