தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நிற்கும் சென்னை மெட்ரோ ரயில்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால் பயணிகள் தவித்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement