தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குவைத் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அவசர அவசரமாக தரையிறக்கம்

Advertisement

சென்னை: குவைத்தில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.26 மணிக்கு 154 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்து, குவைத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் குவைத் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.

விமான பொறியாளர் குழுவினர், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியாததால் அந்த விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் குவைத் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே விமானம் தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டு, தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து, குவைத் விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்க செய்ததால் விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

Advertisement

Related News