தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.60 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Advertisement

திருவனந்தபுரம்: மலையாளத்தில் இந்த வருடம் பிப்ரவரியில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். வெறும் ரூ.20 கோடி செலவில் மட்டுமே தயாரான இந்தப் படம் ரூ.242 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் நாயகனான சவுபின் சாஹிர் தான் இதன் முக்கிய தயாரிப்பாளர் ஆவார்.

இந்நிலையில் இந்தப் படத்தயாரிப்பின் மூலம் ஏராளமாக கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டாமல் மோசடி செய்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை கொச்சியிலுள்ள சவுபின் சாஹிரின் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.தொடர்ந்து நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் இந்தப் படத்தில் பல கோடிக்கு கருப்புப் பணம் முதலீடு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 60 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரூ.148 கோடி வருமானம் கிடைத்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது .ஆனால் அதற்கு ஏற்ப வரி கட்டவில்லை. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சவுபின் சாஹிரிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement