Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாஸ்மாக் பாரில் பதுக்கி மது விற்றவர் கைது: 617 மது பாட்டில்கள் பறிமுதல்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் பாரில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 617 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் இடையார் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே அரசு அனுமதி பெற்ற பார் உள்ளது.

இங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் ேநற்று போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மணிவண்ணன்(30) என்பவர், மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 617 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்ற நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தி அரியலூர் சிறையில் அடைத்தனர்.