தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கு போலி சான்றளித்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
Advertisement
இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு தரப்பில், ‘‘தமிழ் வழி இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்த முயன்றவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வி துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்த்தனர். மேலும், தமிழ் வழியில் பயின்றதாக போலியான சான்றிதழை அளித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.9க்கு தள்ளி வைத்தனர்.
Advertisement