தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை கே.கே. நகரை சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் தெருநாய்களை முறைப்படி கட்டுப்படுத்தாததால், தினசரி ஏராளமான சிறுவர்கள், முதியவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற பொதுச்சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர், ‘‘சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து, உள்ளாட்சி அமைப்புகள், கலெக்டர்கள், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.