தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்

Advertisement

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதை அடுத்து தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிய சூழ்நிலையில் தென் பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த சுழற்சி காரணமாக நேற்று தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உருவானதால், ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. அதற்கேற்ப தமிழக கடலோரத்தில் 11 மாவட்டங்களில் நேற்று கனமழை முதல் மிக கனமழைவரை பெய்தது.

வட மாவட்டங்களில் சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் நேற்று மதியம் மழை பெய்துள்ளது. இந்த மழை 13ம் தேதி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் இயல்பைவிட 2டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்படும் என்றும், தமிழக உள் மாவட்டங்களில் 90 டிகிரி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மதியம் மழை பெய்தது.

சென்னை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கோவை, தர்மபுரி, மதுரை, நாகை, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்குவங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 17ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழை பெய்யும் வாய்ப்புள்ள காரணத்தால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Advertisement

Related News