தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Advertisement

சென்னை: வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை காலத்தை போன்று கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.

தாம்பரம், பூந்தமல்லி, மதுரவாயல், வளசரவாக்கம், போரூர், குன்றத்தூர், மாங்காடு போன்ற பகுதிகளிலும் செம்பரம்பாக்கம், திருவேற்காடு போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்துவருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News