தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுகிறார் சேலம் அருள் எம்எல்ஏ.வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அன்புமணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு டிஜிபி அலுவலகத்தில் புகார்

சென்னை: சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் சேலம் அருள் எம்எல்ஏவை குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக அன்புமணி அணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் பாமக அன்புமணி அணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நேற்று புகார் ஒன்று அளித்தார். அதன் பிறகு கே.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:

Advertisement

சேலத்தில் வாழப்பாடி அருகே இரு தரப்பில் நடந்த மோதலில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எங்களுடையே தரப்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், சேலம் அருள் தொடர்ந்து வெளியே நடமாடி வருகிறார். சமூக வலைதளங்களில் சவால் விடும் விதமாகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். இது சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதாக உள்ளது.

எங்கள் தரப்பில் மட்டும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உள்ளது. பாமக தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வரும் அருளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அருள் நேற்று இரவு நான் யாரை சொல்கிறேனோ அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் போடுவார்கள் என பேசி இருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை பாமக நடத்தும். அருளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது என்பது தேவையில்லாத ஒன்று. பிரச்னை தொடர்பாக காவல்துறை 2 எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. ஆனால் அருள் வெளியே சுற்றி வருகிறார். முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இரண்டு தரப்பிலுமே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News