தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு; வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்வு

Advertisement

புதுடெல்லி: தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்ந்துள்ளது. அதேபோல் தக்காளி விலையும் அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு மாதத்தில் (செப்டம்பர்) இதுவரை இல்லாத அளவிற்கு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 50% அதிகரித்துள்ளது.

காய்கறிகள் விலை உயர்வுக்கு நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று கூறப்படுகிறது. ஒன்றிய நுகர்வோர் விவகார அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, தக்காளி விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 14% அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் கிலோ ரூ. 70 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை 11% அதிகரித்து ஒரு கிலோ ரூ.50ஐ தாண்டியுள்ளது. அதேபோல் உருளைக்கிழங்கின் விலையும் கிலோ ரூ. 60 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து எலாரா செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கரிமா கபூர் கூறுகையில், ‘வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி நீக்கப்பட்ட பிறகு, அதன் விலை அதிகரித்துள்ளது.

தக்காளி அதிகம் விளையும் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெய்த தொடர் மழையால், விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது’ என்றார். நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி வரை பெய்த மழையானது, இந்த பருவத்திற்கான நீண்ட கால சராசரியை விட 7% அதிகமாக உள்ளது. அதேசமயம் நீண்ட கால சராசரியை விட வாராந்திர மழை 7% குறைவாக இருந்தது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிக மழை பெய்துள்ளது. தற்போது மொத்த விதைப்பு பரப்பளவு 1,096.7 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement