தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னேரி நகராட்சியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

Advertisement

பொன்னேரி: தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை சந்திப்பு, பேருந்து பணிமனை உட்பட பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடி கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன் கொடிக்கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என கட்சி பாகுபாடின்றி அரசியல் கட்சி, சமூக அமைப்புகள் என அனைத்து விதமான கொடிக்கம்பங்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் அரசியல் கட்சி கொடி கம்பங்களை கழற்றி எடுத்து, கல்வெட்டுகள் ஆகியவற்றை இடித்து அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News