தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் தாத்தா பாட்டிகள் தினம் கடைபிடிப்பு

Advertisement

ஊட்டி : ஊட்டியில் உள்ள பழமைவாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் தாத்தா பாட்டிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4-வது ஞாயிற்றுக்கிழமை தாத்தா, பாட்டி தினமாக கொண்டாடப்படும் என்று கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். ஜூலை 26ம் தேதி ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பெற்றோர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் தாத்தா, பாட்டிகளான புனித ஜோகிம் மற்றும் புனித அன்னாள் ஆகியோரின் பண்டிகை தினத்துடன் இணைந்து முதியோர்களின் தினமாக கத்தோலிக்க திருச்சபை அனுசரிக்க இதனை தேர்ந்தெடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக ஊட்டி வண்டிசோலையில் உள்ள பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் நேற்று முதியோர்கள் அதாவது தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.

மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமை வகித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். உடன் அருட்தந்தை ஞான தாஸ், பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை இமானுவேல் ஆண்டனி இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இறுதியில் திருப்பலியில் பங்கேற்ற வயதானோருக்கு ஒரு சிறிய பரிசு, தேநீர், இனிப்புகள் வழங்கி வழங்கப்பட்டது. விருப்பமுள்ள குழந்தைகள் அவர்களுக்கு பரிசுகளை வழங்கலாம் என்று பங்கு தந்தையை அறிவித்ததன் பேரில் குழந்தைகள் அனைவரும் தாத்தா, பாட்டிகளுக்கு பரிசுகளை வழங்கி ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.

Advertisement

Related News