தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

Advertisement

மேலூர்: மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி பனையூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). இவரது மனைவி தனசெல்வி (60). இவர்கள் தற்போது சென்னை மணலியில் குடும்பத்தோடு வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்றிரவு கோபாலகிருஷ்ணன், தனது மனைவி தனசெல்வியோடு காரில் தூத்துக்குடி புறப்பட்டார். காரை மணலி சின்னமாத்தூரை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மதுரை-திருச்சி நான்குவழிச்சாலையில் மேலூர் அருகே தாமரைப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு மேலுர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே தனசெல்வி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோருக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மேலூர் எஸ்ஐ பழனியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement

Related News