தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு: கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை

Advertisement

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெண் யானையான பார்வதிக்கு(28), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடது கண்ணில் புரை ஏற்பட்டு உடல்நலம் பாதித்திருந்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டை சேர்ந்த கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு மற்றும் கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழக பேராசிரியர்கள், கால்நடைத்துறை இணை இயக்குனர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து பார்வதி யானை தொடர் கண்காணிப்பில் உள்ளது.

இதனிடையே பார்வதி யானைக்கு கடந்த சில தினங்களாக தொடர் வயிற்றுப்போக்கால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வழக்கமான பணிகளில் இருந்து பார்வதி யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து யானையின் உடல்நலனை கண்காணித்து வருகின்றனர். பார்வதி யானைக்கு ஏற்கனவே கண்புரை பிரச்னை உள்ள நிலையில், தற்போது வயிற்றுப் போக்கு காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவது பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பார்வதி யானை விரைவில் குணமாக வேண்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Advertisement

Related News