தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய் நின்று பேசிய இடத்தின் சாலை நவீன ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு: 2வது நாளாக சிபிஐ ஆய்வு

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிரவீன்குமார் தலைமையிலான 6 பேர் குழுவினர், மதுரையில் இருந்து கூடுதலாக வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் என 12 பேரும் 2 கார்களில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement

இந்நிலையில் 2வது நாளாக நேற்று காலை 7 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்துக்கு வந்து ஆய்வை தொடர்ந்தனர். நேற்று முன்தினம் சாலை அளவீடு செய்த நிலையில் மீதமுள்ள சாலையில் நேற்று காலை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. தாங்கள் கொண்டு வந்திருந்த 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரசார வாகனம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீளம், அகலம் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது. குறிப்பாக 41 பேர் பலியானதற்கு காரணமான குறிப்பிட்ட சம்பவ இடத்தில் மட்டும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நுணுக்கமான ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

நேற்று காலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் வந்த சிபிஐ அதிகாரிகள் மாலை 4 மணி வரை சுமார் 9 மணி நேரம் மதிய உணவிற்கு கூட செல்லாமல் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்களில் சுமார் 15 மணி நேரம் ஆய்வு மற்றும் விசாரணை பணிகளை சிபிஐ அதிகாரிகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றும் சாலையை போலீசார் அடைத்து இருந்ததோடு அங்கு தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

* 3டி லேசர் ஸ்கேனர் கருவியின் சிறப்பு

3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் சுமார் 400 மீட்டர் தூரம் வரை எளிதாக அளவீடு செய்ய முடியும். அதாவது சாலையின் நீளம், அகலம் எவ்வளவு என்பதை கையால் அளக்காமலே கண்டுபிடித்து விடலாம். அதேபோல் சாலையில் எவ்வளவு பேர் நிற்கலாம் என்பதையும் இந்த கருவி துல்லியமாக கணிக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News