தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலத்த மழை, சூறைக்காற்றால் புறப்பாடு, வருகை என சென்னையில் 31 விமான சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

Advertisement

மீனம்பாக்கம்: பலத்த மழை, சூறைக்காற்று காரணமாக புறப்பாடு, வருகை என சென்னையில் 31 விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு 8 மணியிலிருந்து கடுமையான சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அந்த மழை அவ்வப்போது விட்டு விட்டு, அதே நேரத்தில் இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருந்தன. மதுரை, டெல்லி, அயோத்தி, லக்னோ, கோவை, ஐதராபாத், ராஞ்சி, மும்பை, கோழிக்கோடு, கவுகாத்தி, துபாய், பக்ரைன், ஃபிராங்பார்ட் உட்பட 15 விமானங்கள் நீண்ட நேரமாக தொடர்ந்து வானில் வட்டமடித்தன.

வானிலை சீர் அடையாததால், 269 பயணிகளுடன் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 232 பயணிகளுடன் பக்ரைனிலிருந்து வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், 172 பயணிகளுடன் கவுகாத்தியிலிருந்து வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 168 பயணிகளுடன் மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்தபடி இருந்தன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, கோவை, மங்களூர், ஐதராபாத், பெங்களூர், கொச்சி, துபாய், பஹ்ரைன், குவைத், தோகா, ஃபிராங்பார்ட், இலங்கை உட்பட 16 விமானங்கள் பல மணி நேரங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்நிலையில் அவ்வப்போது சூறைக்காற்றும் மழையும் சிறிது ஓய்யும் நேரத்தில், வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானங்கள், அவசர அவசரமாக ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. அதேபோல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்களும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்னைக்கு திரும்பி வந்தன. சென்னை விமான நிலையத்தில் 15 வருகை விமானங்கள், 16 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகியினர்.

Advertisement