தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரோக்கிய அன்னை பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில் மாதா வேடமணிந்து குழந்தைகள் பங்கேற்பு

Advertisement

ஊட்டி : ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில், 70க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாதாவின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, ஆரோக்கிய அன்னை ஆலயம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்பின், நவநாள், தேர் பவனி உள்ளிட்டவைகள் வெகு விமர்சையாக நடைபெறும். இறுதி நாளான 8ம் தேதி ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 70க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாதாவின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை இமானுவேல் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. முன்னதாக குழந்தைகள் ஒவ்வொரு விதமான மாதா வேடமணிந்து ஊர்வலமாக வந்து திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்த பின்னர் அன்னையின் திருத்தேர் பவனி நடைபெற்றது.

நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற பவனி மீண்டும் திருஇருதய ஆண்டவர் பேராலயம் வந்தடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இந்த ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழா திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News