தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு புதுமைத் தொழில்முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Advertisement

சென்னை: காலநிலை மாற்றத்தால் நம் புவிக்கும், புவியில் வாழும் உயிரினங்களுக்கும் அவற்றின் வாழ்வாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்கவகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்கவும், காலநிலை மீள்திறனை வளர்த்தெடுக்கவும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

இச்சவால்களை எதிர்கொள்ள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை மற்றும் தூய்மை ஆற்றல், வளச் சுரண்டலைத் தடுப்பதற்கான சுற்றுச்சூழல்-மாற்று தீர்வுகள், காலநிலை நிதி மற்றும் நிலையான தொழில்நுட்பங்களுக்குப் பங்களிக்கும் தொடக்க நிறுவனங்களை அடையாளம் கண்டு, ஆதரித்து வளர்த்தெடுக்க SustainTN எனும் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரால் 2024 -2025-ம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட் அப் டி.என். நிறுவனத்துடன் இணைந்து மேற்கூறிய துறைகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வகையில் உள்ள 10 புத்தொழில் நிறுவனங்கள்/புத்தொழில் கருத்துருக்கள் அடையாளம் காணப்பட்டு ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டுதலையும், தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த ரூ. 10 லட்சம் மானியமும் வழங்கப்பட்டு சந்தை வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும். இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க Sustain TN எனும் இணையமுகப்பு துணை முதலமைச்சரால் 13.03.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் https://www.sustaintn.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 15.05.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

இயக்குநர்,

சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை ,

9வது தளம், எண். 327, மெட்ரோஸ், அண்ணா சாலை, நந்தனம்,

சென்னை - 600035.

Advertisement