தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு: பண்ணையில் 660 காசாக நிர்ணயம்; கடைகளில் ரூ.8 வரை விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் நேற்று முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து, ரூ.6.60க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 3 முறை முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம், முட்டை விலையில் 5 காசுகள் என்இசிசி உயர்த்தியது.

Advertisement

இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.6.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 660 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் முட்டை விலையில் 4வது புதிய உச்சமாகும். நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், சுமார் 9 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

கோடைக்காலம் முடிவடைந்து பருவமழை காலம் துவங்கியபோதும், வெப்ப அலை தொடர்ந்து வருவதால் கோழிப்பண்ணைகளில் முட்டையின் உற்பத்தி இன்னும் பழையபடி அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் முட்டை விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் நாமக்கல்லில் இருந்து 55 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ரூ.8 வரை முட்டை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Related News