தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 5,096 பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து நடுநிலை மதிப்பீடு: 13ம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை உத்தரவு

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 96 பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து நடுநிலை மதிப்பீடு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் 1, 2 மற்றும் 3ம் வகுப்புகளில் கற்பித்தல், கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கியது. 2025ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலை மதிப்பீடு (மிட்லைன் அசெஸ்மெண்ட்) செய்வதற்காக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 96 பள்ளிகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 135 பள்ளிகள் (சென்னை 136 பள்ளிகள், நீலகிரி 100 பள்ளிகள் தவிர) வீதம் 5 ஆயிரத்து 96 பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,620 மாணவ-மாணவிகள் என மொத்தம் 61 ஆயிரத்து 560 மாணவ-மாணவிகளிடம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த மதிப்பீடு பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 144 கணக்கெடுப்பாளர்கள் வீதம் 5,472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு முதுநிலை ஆசிரியருடன் சேர்ந்து இந்த மதிப்பீடு பணியை இன்று முதல் 13ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

Advertisement