டென்மார்க்கில் நடந்த உலக தடகளப்போட்டியில் தமிழக தீயணைப்பு வீரர் 4 தங்கம் வென்று சாதனை
Advertisement
அதனைத்தொடர்ந்து சுமார் 7 மாத காலமாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து கொண்டு அண்ணா விளையாட்டு மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து இந்தியா சார்பில் உலகளவிலான தீயணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற மாரியப்பன் தகுதி பெற்றார். அதைத்தொடர்ந்து டென்மார்க் நாட்டில் நடந்து வரும் தீயணைப்பு வீரர்களுக்கான உலகளவிலான தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் மாரியப்பன் கலந்து கொண்டார். இதில் அவர் 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு நான்கு தங்க பதக்கங்களை வென்றார். இதையடுத்து அவரை தமிழ்நாடு தீணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் நெல்லை மாவட்ட தீயணைப்புத்துறையினர் நெல்லையில் உற்சாகமாக கொண்டாடினர்.
Advertisement