வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கப்படும்: அமைச்சர் தகவல்
Advertisement
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். நாளை நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு பேசினார். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் குமரவேல், சீதாராமன், மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement