தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு முழுவதும் நூதன முறையில் வாக்குசேகரித்த வேட்பாளர்கள்: மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக காய்கறி விற்ற திமுக எம்.எல்.ஏ

Advertisement

திருச்சி: வாக்கு பதிவுக்கு 15 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். மக்களை கவர காய்கறி விற்றும் இஸ்திரி போட்டும், நாற்று நட்டும் நூதன முறையில் வாக்குகளை சேகரித்தனர். திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பரமக்குடி அருகே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வெட்டன் விடுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர் காய்கறி கடையில் காய்கறிகளை விற்பனை செய்தும், ஜூஸ் கடையில் ஜூஸ் போட்டு கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேநீர் கடையில் மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.

திருவள்ளுர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த செந்திலுக்கு ஆதரவாக பூவிருந்தவல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சட்டைக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார். காக்களூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்த அவர் இஸ்திரி கடையில் சட்டைக்கு இஸ்திரி போட்டு கை சின்னத்திற்கு வாக்கு கோரினார். தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வயலில் இரங்கி விவசாய தொழிலாளர்களுடன் இணைந்து நாற்று நட்டு வாக்கு சேகரித்தார். கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் பரப்புரையில் ஈடுபட்ட அவர் தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களுடன் தலையில் பச்சை துண்டை கட்டிக்கொண்டு வயலில் இறங்கி நாட்டுப்புற பாடல்பாடிக்கொண்டே நாற்றுநட்டும் ட்ராக்டர் ஓட்டி உழவு பணி செய்தும் வாக்கு சேகரித்தார்.

Advertisement