தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!

Advertisement

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டார். தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகள், மேலாளர் மற்றும் ஆர்பிஎப் உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிகாரிகள் டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் உள்ள பொதுமக்களை அகற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து செல்போன் எண்ணையும் சைபர் கிரைம் போலீசார் ஒரு பகுதியாக தேடி வருகின்றனர்.

மர்ம நபர் அழைப்பானது கூடுவாஞ்சேரியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி மூலம் மர்ம நபர் பேசிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். வெடிகுண்டு குறித்து மோப்பநாய் , சென்ட்ரலில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு தேடுதல் படையினர் ஆகியோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதியில் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளிடையே அச்சம் காணப்படுகிறது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பகுதிக்கும் போலீசார் விரைந்துள்ளனர்.

Advertisement