தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம், தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: வழக்கில் நாளை இறுதி விசாரணை

Advertisement

புதுடெல்லி: : நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மறுதேர்வு நடத்தக் கோரியும் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வின் புனிதத்தன்மையை பாதிக்கும் வகையிலான பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை தந்தால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று திட்டவட்டமாக கூறியது. மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில், மற்ற மையங்களை விட அதிகமான தேர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கிறதா என்பதை அறியும் வகையில் நாடு முழுவதும் நகரம், தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை நேற்று பிற்பகல் 12 மணிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகள் நகரம் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் பெயர்கள் இல்லாமல் மதிப்பெண் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நீட் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நாளைஇறுதி விசாரணை நடக்க உள்ளது.

அதன் அடிப்படையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

6 பேர் முழுமதிப்பெண் பெற்ற மையத்தில் அதிகபட்சம் 682 தான் அரியானாவில் ஜஜ்ஜாரில் உள்ள ஹர்தயாள் பப்ளிக்பள்ளி மையத்தில் 6 பேர் 720 மதிப்பெண் எடுத்து முழுமதிப்பெண் எடுத்து இருந்தனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மறுதேர்வு நடத்தப்பட்டதில் ஒருவர் மட்டும் 682 மதிப்பெண் பெற்றுள்ளார். மற்றவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Advertisement