தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு

Advertisement

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று நடந்தது. இதில் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது தலைமையிடத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆர்.தயாளகுமார் தலைமைப் பொறியாளர்( திருச்சி மண்டலம்), காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள், “நடப்பாண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து அம்மாநில அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர். இதேபோன்று புதுவை மற்றும் கேரளா அரசுகள் சார்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா கூறியதாவது, “தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு இனிவரும் நாட்களில் திறந்து விட வேண்டும்” என்று உத்தரவிட்டு, கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

Advertisement

Related News