உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு
Advertisement
அப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள், “நடப்பாண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து அம்மாநில அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர். இதேபோன்று புதுவை மற்றும் கேரளா அரசுகள் சார்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா கூறியதாவது, “தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு இனிவரும் நாட்களில் திறந்து விட வேண்டும்” என்று உத்தரவிட்டு, கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
Advertisement