தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூப்பர் கோப்பை கால்பந்து: கோவா சாம்பியன்

மர்கவோ: ஏஐஎப்எப் சூப்பர் கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி, எப்சி கோவா அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து அசத்தியுள்ளது. ஏஐஎப்எப் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டிகள் கோவாவில் நடந்து வந்தன. போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட எப்சி கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்த அணிகள், மர்கவோ நகரில் நடந்த இறுதிப் போட்டியில் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதியும், கோல் கீப்பர்களின் சிறப்பான ஆட்டத்தால் 120 நிமிடங்கள் முடிந்த பின்பும் கோல்கள் போட முடியவில்லை. அதையடுத்து, பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதிலும் இரு தரப்பு வீரர்களும் அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தினர். இருப்பினும், கடைசியில், கோவா அணி, 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. கோவா எப்சி அணி வெல்லும் 3வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement