தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடைகாலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தீ மூட்டி சமைப்பதை தவிர்க்க வேண்டும்

Advertisement

*மாவட்ட வன அலுவலர் அறிவுரை

ஊட்டி : கோடை காலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லவும், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சமைக்கவும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து வரவும் தடை விதித்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி வன கோட்டம் சார்பில் காடுகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உலக வனநாள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

ஊட்டி அண்ணா கலையரங்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ஒரு வனம் அழியும் போது வெறும் மரங்கள் அழிவதில்லை. அதனுடன் சேர்த்து தாவரங்கள், மூலிகைள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை அழியும். காடுகள் அழிக்கப்படுவதால் தட்பவெப்ப நிலையில் மாறுபாடு ஏற்படுகிறது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி சேரிங்கிராஸ், மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் வரை நடந்தது. இதில் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

முன்னதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில், ‘‘ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லவும், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சமைக்கவும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து வருவதையும் தவிர்க்க வேண்டும்.

கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் தடையை மீறி செயல்பட கூடாது. அத்துமீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Advertisement