Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடை விடுமுறை, முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!

சென்னை: சென்னை: கோடை விடுமுறை, முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 80 பேருந்துகளும், நாளை மறுநாள் 620, 16-ம் தேதி 655 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து 15, 16, ம் தேதிகளில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கோடை விடுமுறை, சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14-ந் தேதி (நாளை) வியாழக்கிழமை அன்று 80 பஸ்களும், 15-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று 620 பஸ்களும், 16-ந் தேதி சனிக்கிழமை அன்று 655 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15 மற்றும் 16-ந்தேதிகளில் 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 15 மற்றும் 16-ந் தேதிகளில் 25 பஸ்களும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 5,676 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 10,853 பயணிகளும் சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.