தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் படகுகள் பழுது பார்க்கும் பணி மும்முரம்

Advertisement

ஏற்காடு : ஏற்காடு கோடை விழாவையொட்டி, படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பக்கூடிய இடமாக ஏரி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா நடுவில் இயற்கை அழகுடன் அமைந்துள்ள படகு இல்லம் விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு, படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இதற்காக அங்குள்ள ஏரியில், மோட்டார் படகுகள் மட்டுமின்றி மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, ஏற்காட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பிரசித்தம். இந்த ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வர்ணம் பூசும் பணியும் தொடங்கும்.

Advertisement

Related News