Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயித்து அரசு உத்தரவு

சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பி விலை ரூ.3,151 ஆகவும், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267 ஆகவும், 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்3,344.20 ஆகவும், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.