தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள், நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Advertisement

*மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள், நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்

தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வன உரிமை சட்டம் 2006ன்படி பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது குறித்து மாவட்ட அளவிலான குழுவுக்கு பயிலரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வன உரிமை பாதுகாப்பு சட்டம், துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தனிநபர் உரிமைகள், கிராம சபை கூட்டுதல், நீண்ட கால மற்றும் குறுகிய கால செயல்பாடுகள், தனிநபர் உரிமைக்கான ஆதாரம், பழங்குடியின கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் உரிமைகள் மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் தேவையான தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இப்பயிற்சி வகுப்பை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக பயின்று பழங்குடியினர் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்தகுமார்சிங் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து வட்டாட்சியர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement