தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநிலத்தின் உரிமைகளுக்காக ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிகள் வெற்றியடையும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு

Advertisement

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரால் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரை நூற்றாண்டுகாலம் ஆகிறது. ஐம்பது ஆண்டு காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.

அண்ணா, கலைஞர் ஆகியோரின் உயிர் மூச்சாக இருந்த மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் தருவதற்கு குழு அமைத்திருக்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தகுந்தது. வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும். மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கப்பட்ட உடன் இன்றைக்கும் பாஜ, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது பழி மொழிந்திருக்கிறது. அண்ணாவின் பெயரால் அமைந்திருக்கிற அதிமுக, பாஜவை வழி மொழிந்திருக்கிறது. இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு மாநில உரிமைகளுக்கு ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் வெற்றியடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Related News