தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டை விட வரையாடுகள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 24ம் தேதி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் உள்பட 29 பிளாக்குகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் வனத்துறை ஊழியர்கள் சுமார் 60 பேர் ஈடுபட்டிருந்தனர். நான்கு நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை பொறுத்தவரை துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்பேரில், ரேஞ்சர் செல்லமணி தலைமையில் அனைத்து ரேஞ்சுகளிலும் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மலை உச்சி பகுதியில் வரையாடுகளுக்கு தேவையான உணவும் நீரும் போதுமான அளவு உள்ளதால், எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகளவு குட்டிகளை காண முடிந்தது. எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்’’ என தெரிவித்தனர்.

Advertisement