தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீராம்சேனா நிர்வாகி கொலையில் 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை: ஓசூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ஓசூர்: ஓசூரில் ஸ்ரீராம்சேனா நிர்வாகி கொலை வழக்கில், வாலிபர்கள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே சொப்பட்டியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மகன் மோகன்பாபு (25). இன்ஜினியரிங் படித்த இவர், தனியார் நிறுவன ஊழியராக இருந்து வந்தார். மேலும், ஸ்ரீராம்சேனா (தமிழ்நாடு) என்ற அமைப்பின் ஓசூர் நகர செயலாளராக இருந்தார். கடந்த 2021ல் மோகன்பாபுவின் டூவீலரும், திலக் என்பவரின் தந்தை முருகேசனின் வாகனமும் மோதியது. இதனால் அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 1.1.2022 அன்று மோகன்பாபுவை, திலக் (23) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.

Advertisement

இந்த கொலை தொடர்பாக மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி, சொப்பட்டி திலக் (23), பவன் (25), மூர்த்தி (24), சுரேஷ் (24), அப்பு (22), ஹேமந்த் குமார் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ஜாமீனில் வந்த திலக்கை பழிக்கு பழியாக கூலிப்படையினர் கடந்த 2023 மே 12ம் தேதி ஓசூரில் வெட்டிக் கொலை செய்தனர். மோகன்பாபு கொலை வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சந்தோஷ் விசாரித்து பவன், மூர்த்தி, சுரேஷ், அப்பு, ஹேமந்த் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement