தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

Advertisement

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடர் கனமழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலேரி, சிங்கிலிபாடி, எடையார்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பொன்னி, பாபட்லா ரகம் உள்ளிட்ட நெற்பயிர்கள், இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்தன.

இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையால் மேற்கண்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மேலும், விளை நிலங்களில் தண்ணீர் வடியாததால், நெல்மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனர்.

தற்போது, நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிரிட செலவிட்ட பணம் கூட தங்களுக்கு கிடைக்காது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ள நெற்பயர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News