இலங்கை கடற்படை கைது செய்துள்ள 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Advertisement
மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26ம் தேதி படகில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 27ம் தேதி நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடி படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளனர். எனவே, இந்த பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Advertisement