தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை தந்தம் பறிமுதல்: முக்கிய ஏஜென்ட் உள்பட 3 பேர் கைது

 

Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரை அடுத்த சிவகாமிபுரம், மீனவர் குப்பம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மெரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோயில் அருகில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 4 கிலோ எடை கொண்ட 2 பெரிய யானை தந்தங்கள் இருந்தன. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த காதர் பாட்சா(27), சாயல்குடியை சேர்ந்த ஹரிகுமார்(28) என தெரியவந்தது. யானை தந்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே காவாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராம்(26) என்பவர் விற்பனை செய்வதற்காக கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து காதர்பாட்சா, ஹரிகுமார், ஸ்ரீராம் ஆகிய மூவரையும் கைது செய்து ராமநாதபுரம் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

காவாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராம் இலங்கைக்கு கடல் வழியாக கடல் குதிரை, யானை தந்தம், சுறா துடுப்பு போன்ற பொருட்களை கடத்தும் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது பிடிபட்டுள்ள யானை தந்தங்களும் இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement