தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென் கொரியாவில் அதிரடி பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் யோல் கைது

Advertisement

சியோல்: தென் கொரியாவில் கடந்த டிசம்பம் 3ம் தேதி ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதற்காக அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, யூன் சுக் யோலுக்கு எதிராக ராணுவம், போலீசாருடன் இணைந்து ஊழல் புலனாய்வு அமைப்பு கூட்டு விசாரணை நடத்துகிறது. புலனாய்வு அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் யோலை கைது செய்ய அதிபரின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அதிபரின் பாதுகாப்பு படையினரும், அவரது கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோரும் குவிந்து தடுத்தனர். இதனால் யோலை கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பினர். இந்நிலையில், யோலை கைது செய்ய 2வது முறையாக நேற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இம்முறை கட்சி தொண்டர்களை சமாளிக்க 1000 போலீசார் குவிக்கப்பட்டனர். அதிபரின் பாதுகாப்பு படையினர் வைத்த தடுப்புகளை தாண்டி புலனாய்வு அதிகாரிகள் ஏணிகள் பயன்படுத்தி ஜன்னல்கள் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பிறகு யோல் கைது செய்யப்பட்டார். அவரை முழு பாதுகாப்புடன் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

Related News