தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சவுமியா தோல்விக்கு ஜி.கே.மணி காரணம்: பாமக மாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. புத்தகத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டு பேசினார். முன்னதாக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், கட்சிக்காக யார், யாரெல்லாம் உழைத்தார்களோ, யாரெல்லாம் தியாகம் செய்தார்களோ, அவர்களை எல்லாம் ஜி.கே.மணி அடையாளம் தெரியாமல் ஒழித்து விட்டார். இன்று நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சவுமியா அன்புமணி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, பெரிய எழுச்சியை பார்க்க முடிந்தது. ஆனால், ஜி.கே.மணி தலைமையிலே ஒரு சதிக்கூட்டம், திட்டமிட்டு சவுமியா அன்புமணியை தோற்கடிப்பதற்கான வேலையை செய்தது.

பாமகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் வெளியே சென்றதற்கு ஜி.கே.மணி தான் காரணம். 30 ஆண்டு காலமாக இந்த கட்சிக்கு அவர் செய்தது அத்தனையும் துரோகம் மட்டுமே. ஜி.கே.மணி என்ன ஆற்காடு நவாப் பேரனா?, பல ஆயிரக்கணக்கான கோடி வைத்திருந்தாரா? சாதாரண சைக்கிளில் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்கு போனவர், இன்று பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அவருக்கு எப்படி வந்தது?. இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டது உண்டா?. அன்புமணி குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தில் இருக்க கூடாது என்று ஜி.கே.மணி சதி செய்து, ராமதாஸ் வாயாலேயே எங்களை பற்றி அசிங்கமாக பேச வைத்து விட்டார். ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை, தடம் புரளாமல் ராமதாசை கடவுளாக ஏற்றுக் கொண்டு, இன்று கட்சியை வழிநடத்த தகுதியுள்ள நபர் அன்புமணி தான் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு வேலுசாமி பேசினார்.