தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூனாம்பேடு அருகே காணாமல்போன கல்லூரி மாணவி காதலனுடன் மீட்பு

Advertisement

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் மகள் சசிகலா (18). மரக்காணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி என்பதால் பதறிபோன அவரது பெற்றோர் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தநிலையில், பெண்ணின் உறவினர்கள் கடந்த 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாயமான மாணவி தனது காதலனான சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் டேனியல் (24) என்பவருடன் பாபநாசம் காவல் நிலையத்தில் திருமண கோலத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே, இந்த வழக்கு மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, பாபநாசம் சென்ற போலீசார் இருவரையும் மீட்டு மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொண்ட இவர்கள் இரு வீட்டாருக்கும் பயந்து பாபநாசம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement