தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை இந்தியா அழைத்து வர உத்தரவு

புதுடெல்லி: நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி காதுன் மற்றும் இவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டு, முறையான விசாரணையின்றி வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்றும், ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் சோனாலியின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

Advertisement

இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், ‘காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது’ என்று கூறி, நாடு கடத்தப்பட்டவர்களை ஒரு மாதத்திற்குள் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக உள்ள சோனாலிக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, வங்கதேச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. இதற்கிடையே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, ‘முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் சோனாலி மற்றும் அவரது 8 வயது மகனை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement

Related News