மகன்களை அடித்ததற்கு தட்டிக்கேட்ட தந்தைக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது
Advertisement
இதுகுறித்து சிறுவர்கள், தனது தந்தை அசோக்குமாரிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்து சம்பவ இடத்திற்கு சென்ற அசோக்குமார், ராஜகுமாரிடம் மகன்களை ஏன் மதுபாட்டில்களை எடுத்து வைக்கச்சொல்லி அடித்ததாய் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து, அசோக்குமார் தலையில் தாக்கினார். சத்தம்கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த அசோக்குமாரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், வழக்குபதிவு செய்த போலீசார், ராஜகுமாரை கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Advertisement