தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோலூர்-கோக்கால் சாலை ஓரிரு நாளில் சீரமைப்பு: அதிகாரிகள் தகவல்

Advertisement

ஊட்டி: சோலூர் முதல் கோக்கால் வரையிலான சாலை ஓரிரு நாட்களில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி சோலூர் அருகேயுள்ள தூபக்கண்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேபோல், கன்னனேரிமூக்கு பகுதியிலும் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிபள்ளி மாணவர்கள் சோலூர் மற்றும் கோக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்கள் அனைத்து தேவைகளுக்கும் ஊட்டிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், சோலூரிலிருந்து தூபக்கண்டி வழியாக கோக்கால் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சாலையை சீரமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே இருந்த பழுதடைந்த சாலை தோண்டப்பட்டுள்ளது. இதனால், சாலை முழுவதும் ஜல்லி கற்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால், உடனடியாக இச்சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், கன்னேரிமூக்கு மற்றும் தூபக்கண்டி போன்ற பகுதிகளில் இருந்து சோலூர் மற்றும் கோக்கால் பகுதி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி வாகனங்கள் செல்லாத நிலையில் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் செல்லும் வகையில் இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். விரைவில் சீரமைக்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், சோலூர் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இச்சாலையை ஓரிரு நாட்களில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News