தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொறியாளர் சங்கத்துக்கு அமைச்சர் வாழ்த்து

Advertisement

சென்னை: பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு என புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் சிறப்பாக செயல்பட அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொதுப்பணித்துறை 1858ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 165 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு சூழ்நிலையின் காரணமாக அண்மையில் அரசு ஆணைப்படி பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிந்தது.

இந்நிலையில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு பொறியியல் பணியின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் அவர்தம் பணிச்சூழல் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் கீழ் பதியப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித் துறையின் தலைமை பொறியாளர்களான மணிவண்ணன் (தலைவர்), செல்வராஜ் (துணைதலைவர்), செந்தில் (துணைதலைவர்) தலைமையில் பொதுப்பணித்துறைக்கென புதிதாக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Related News