தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* அவரைக்காய்களுடன் 2 பச்சை மிளகாயை சேர்த்து வைத்தால் எறும்பு வராமலிருக்கும்.

Advertisement

* ஸ்டீல் டீ வடிகட்டி அடைப்பிருந்தால் அதை நெருப்பில் சில நிமிடங்கள் காட்டிய பிறகு கழுவினால் அடைப்பு நீங்கி சுத்தமாகும்.

* வெள்ளிப் பொருட்களை பட்டுத் துணியில் சுற்றி மர அலமாரியில் வைத்தால் கருத்து போகாமலிருக்கும்.

* ஊறுகாய் தயாரிக்கும் போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.

* பகோடாவுக்கு கடலைமாவுடன் நான்கில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் மொறு மொறுப்பும், சுவையும் கூடுதலாகும். அதிக சத்தும் கிடைக்கும்.

* சப்பாத்திக்கு கோதுமை மாவுடன் சிறிது மைதா சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி உப்பலாக இருக்கும்.

* மெது வடைக்கு உளுத்தம் பருப்புடன் சிறிது பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால் வடை நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

* பால் புளிக்காமல் இருக்க பாலை காய்ச்சும் போதே ஏலக்காயை சேர்த்தால் போதும், பால் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

* முத்து நகைகளையும், தங்க நகைகளையும் சேர்த்து வைக்காமல் தனித்தனியாக வைத்தால் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

* பட்டாணி சூப்பில் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து சேர்த்து கொதிக்க விட்டால் சூப் கெட்டியாக இருக்கும்.

* பட்டுப் புடவைகளை சுடுநீரில் அலசக் கூடாது. ஆறு மாதத்துக்கொரு முறை வெயிலில் காய வைத்து, அடிக்கடி மடிப்பை மாற்றி மடித்து வைப்பது அவசியம்.

* வீட்டு ஜன்னல்களுக்கு கரும்பச்சை, கருநீல நிற திரைச் சீலைகளை பயன் படுத்தினால் வெயிலின் தாக்கம் உள்ளே வராது.

* உண்மையான தேன் என்றால் ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தில் உறிஞ்சப்படாமலும், பரவாமலும் அப்படியே நிற்கும்.

* கம்பளி உடைகளின் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.

* பூந்திக் கொட்டையை உடைத்து தண்ணீரில் போட்டு பட்டுப் புடவையை ஊற வைத்து துவைத்தால் புடவையில் இருக்கும் பிசுபிசுப்பு நீங்கி பளிச்சிடும்.

- மல்லிகா அன்பழகன்

Advertisement

Related News