தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிவகாசியில் பரபரப்பு பட்டாசு ஆலை அதிபர்கள் வீடு, ஆபீசில் ஐ.டி ரெய்டு

சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு குழுக்களாக 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்தும் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை செய்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீர் சோதனை ஏன்? சிவகாசியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் முறையான பில் இன்றி கொண்டு செல்லப்படுவதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகின்றது. சிவகாசியில் இருந்து பட்டாசுகள் ஏற்றி செல்லும் சில லாரிகளில் பாதிக்கு மட்டும் முறையான பில்கள் இருப்பதாகவும் பெரும்பாலான பட்டாசுகள் பில் இன்றி கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.