தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி அருகே பள்ளி நிர்வாகி வீட்டில் கொள்ளை முயற்சி: நகை, பணம் தப்பியது; போலீசார் விசாரணை

சிவகாசி: சிவகாசி அருகே தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியாபுரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (50). இவர், சிவகாசி-எம்.புதுப்பட்டி ரோட்டில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி லலிதா சென்னையில் வசித்து வருகிறார். செல்லபாண்டியன் தனது மனைவியை சந்திக்க கடந்த 4ம் தேதி சென்னை சென்றார். இன்று காலை செங்கமலநாச்சியாபுரம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டு அறையில் கபோர்டுகள் அரிவாளால் சேதப்படுத்தப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.

Advertisement

இது குறித்து செல்லபாண்டியன் அளித்த தகவலின்பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் இயந்திரம் மூலம் ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. ஆனால், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையர்கள் கையில் சிக்காமல் தப்பியது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வுசெய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News